
வடக்கு பிரான்சில் உள்ள 14 இலங்கையர்களுக்கு நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
மேலும், ஐரோப்பா உட்பட பல நாடுகளில் மனித கடத்தல் கும்பலை நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட ஒரு குழுவினருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக RFI தெரிவித்துள்ளது.
இதேவேளை, ஐரோப்பா உள்ளிட்ட பல நாடுகளில் மனித கடத்தல் தொடர்பாக ஐரோப்பாவில் பாதுகாப்புப் படையினர் தீவிர கவனம் செலுத்தியதன் காரணமாக, வடக்கு பிரான்சின் பாதுகாப்புப் படையினர் மனித கடத்தல் குறித்த விவரங்களை அண்மையில் வெளியிட முடிந்தது.
இதன்படி, பாரிஸில் இருந்து வடக்கே 80 கிலோமீற்றர் தொலைவில் உள்ள Serifontein கிராமத்தில் கடை நடத்தி வந்த நபர் ஒருவர் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அங்கு 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், அவர்கள் இலங்கையர்கள் என RFI தெரிவித்துள்ளது.
மேலும், அவர்கள் வடக்கு பிரான்சில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
குற்றம் சாட்டப்பட்ட பிரதான சந்தேகநபருக்கு 4 வருட கடூழிய சிறைத்தண்டனையும் ஒரு வருட இடைநிறுத்தப்பட்ட சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்தச் செய்திகள் குறிப்பிடுகின்றன.
இதன்படி, கிழக்கு ஐரோப்பாவின் எல்லை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து உக்ரைனில் இருந்து இலங்கை மற்றும் பங்களாதேஷ் குடியேற்றவாசிகளை ஐரோப்பாவிற்கு அழைத்துச் செல்வதற்கான விலையை நிர்ணயித்துள்ளதாகவும் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
அத்தோடு, கடந்த சில ஆண்டுகளில், ஐரோப்பாவிற்குப் பயணிக்கும் புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதோடு அதனுடன் தொடர்புடைய கடத்தல்களும் பெருமளவில் வளர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், இந்த சட்டவிரோதமாக குடியேறியவர்களில் பலர் பிரிட்டனுக்கு வர முயற்சி செய்கிறார்கள் எனவும் நாட்டின் புள்ளிவிவரங்களின்படி, 2022 ஆம் ஆண்டில் ஐரோப்பாவிலிருந்து 45,000 க்கும் மேற்பட்ட குடியேறியவர்கள் பிரிட்டனுக்கு வந்துள்ளதாகவும், இது முந்தைய ஆண்டில் பதிவு செய்யப்பட்ட 17,000 ஐ விட 60% அதிகமாகும் என செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.