அரசாங்கத்தினால் அமுல்படுத்தப்பட்டுள்ள வரித் திருத்தங்களுக்கு எதிராக ஒரு வாரகாலப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இன்று ஆரம்பமாகும் போராட்ட வாரமானது கறுப்பு எதிர்ப்பு வாரம் என பெயரிடப்பட்டுள்ளதாக அதன் பேச்சாளர் கலாநிதி சம்மில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
இதன்படி, தமது கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்கப்படாவிட்டால் எதிர்காலத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் கலாநிதி சமில் விஜேசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அரசாங்கத்தின் வரித் திருத்தங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இந்த கறுப்பு போராட்ட வாரத்தில் பல்கலைக்கழக ஆசிரியர்களும் இணைந்து கொள்ளவுள்ளதாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்க சம்மேளனத்தின் தலைவர் பேராசிரியர் ஷியாம பன்னஹக்க எமக்கு தெரிவித்துள்ளார்.