தலங்கம பொலிஸ் நிலையத்தின் சிறு முறைப்பாடுகள் பிரிவின் நிலைய கட்டளைத் தளபதியாக இருந்த பொலிஸ் பரிசோதகர் வைத்தியர் ஒருவராய் தாக்கி பொலிஸ் அறையில் அடைத்த குற்றச்சாட்டில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பொலிஸ் பரிசோதகர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், கலாநிதி ஹரேந்திர டி சில்வா ஜயசிங்கவினால் தாக்கல் செய்யப்பட்ட இந்த அடிப்படை உரிமை மீறல் மனுவின் தீர்ப்பை அறிவிக்கும் போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு மருத்துவரின் அடிப்படை உரிமைகளை மீறிய குற்றத்திற்காக சம்பந்தப்பட்ட பொலிஸ் பரிசோதகரின் தனிப்பட்ட பணத்திலிருந்து 50,000 ரூபாவை நட்டஈடாக வழங்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், மனுதாரர் மருத்துவருக்கு அரசு 50,000 ரூபாய் இழப்பீடு வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.