உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான வாக்குச் சீட்டுகள் அச்சடிப்பதற்கான விநியோகம் மாவட்ட மட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
,ஏழும், தற்போது தேர்தலை நடத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதேவேளை, உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை தேர்தல்கள் ஆணைக்குழு தயாரித்து, அச்சிடுவதற்கு அனுப்பிவைத்துள்ளதாகவும், வாக்குச் சீட்டுகள் அச்சடிக்கத் தயாராக உள்ளதாகவும் அரசாங்க அச்சகம் தெரிவித்துள்ளது.
இதன்படி, வாக்குச் சீட்டுகளை அச்சிடுவதற்குத் தேவையான தாள்கள் கையிருப்பு தனது நிறுவனத்தில் உள்ளதாக அரசாங்க அச்சக அதிகாரி கங்கானி லியனகே தெரிவித்துள்ளதோடு உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்குத் தேவையான ஏனைய ஆவணங்களை அச்சடிக்கும் பணி ஏற்கனவே அரசாங்க அச்சகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும், உள்ளூராட்சி மன்றத் தேர்தலை மார்ச் மாதம் 9ஆம் திகதி நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.