பாராளுமன்ற உறுப்பினர் நாலக கொடஹேவா உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளை விடுதலை செய்து கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
மேலும், இலங்கை பரிவர்த்தனை மற்றும் பத்திரங்கள் ஆணைக்குழுவின் தலைவராக கடமையாற்றிய போது, ஆணைக்குழுவின் நிதியில் இருந்து 50 இலட்சம் ரூபாவை “தருண்யத ஹெடக்” என்ற அமைப்புக்கு வழங்கி அரசாங்க நிதியை குற்றவியல் முறையில் பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்திருந்த பாராளுமன்ற உறுப்பினர் நாலக கொடஹேவா உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளையம் விடுதலை செய்யுமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளார்.
இதன்படி, தீர்ப்பை அறிவித்த நீதிபதி, பிரதிவாதிகளுக்கு எதிரான குற்றச்சாட்டை நிரூபிக்க அரச தரப்பு முன்வைத்த ஆதாரங்கள் போதுமானதாக இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப்படுவதாக உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
இதன்படி, விடுவிக்கப்பட்ட நபர்களாக பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவின் முன்னாள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் தம்மிக்க பெரேரா மற்றும் தருணித்ய ஹெடக்கின் ரொனி இப்ராஹிம் ஆவர்காள்.
மேலும், கடந்த அரசாங்கத்தின் போது நாலக கொடஹேவா மற்றும் மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபர் இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தார்.