(மிதுஷன்)
அம்பாறை மாவட்டத்திற்குட்பட்ட திருக்கோவில் 02பகுதியைச் சேர்ந்த சகவாழ்வு சங்கத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட விழிப்புணர்வு வீதி நாடகம் ஒன்று அக்கரைப்பற்று அருவிக் குழு மன்றத்தினரால் நல்லிணக்கம் தொடர்பான விழிப்புணர்வு வீதி நாடகம் ஒன்று இன்றைய தினம் திருக்கோவில் பிரதேசத்தில் இடம் பெற்றது.
அந்த வகையில் இதற்கு பிரதம அதிதியாக திருக்கோவில் பிரதேச செயலகத்தினுடைய செயலாளர் கஜேந்திரன் கலந்து சிறப்பித்தார்.சிறப்பு அதிதியாக பிரதேச சபைத் தவிசாளர் கமலராஜனும் இந் நிகழ்வில் கலந்து கொண்டார்.அது மட்டுமின்றி திருக்கோவில் பிரதேச நிர்வாக சபை உத்தியோகத்தர் கந்தசாமி என பல அதிதிகள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
பிரதேசங்களில் காணப்பட்ட மக்கள் இதனைக் கண்டு கழித்து பல நல்ல விடயங்களை கற்றுக் கொண்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.