
அநுராதபுரத்தில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாயும் இரண்டு பிள்ளைகளும் உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை, தீ விபத்தில் காயமடைந்த தந்தை அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அநுராதபுரம், அலையாபத்து பகுதியில் வீடொன்று நேற்றிரவு தீக்கிரையாகியுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அலையபற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.