அரசாங்கத்தின் வரிக் கொள்கைகளுக்கு எதிராக பெறப்பட்ட பத்து இலட்சம் கையெழுத்து மனு எதிர்வரும் காலங்களில் அதிகாரிகளிடம் கையளிக்கப்படும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும், அதிகாரிகளிடம் இருந்து பெறப்படும் பதில்களின் அடிப்படையில் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என அங்கத்தின் ஊடக குழு உறுப்பினரும் வைத்தியருமான ருவன் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
அத்தோடு, மக்களின் ஆதரவின் அடிப்படையில் பல்வேறு தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு முன்மொழியப்பட்டுள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடக குழு உறுப்பினர் வைத்தியர் ருவன் ஜயசூரிய மேலும் தெரிவித்தார்.
மேலும், கடந்த திங்கட்கிழமை முதல் அரசாங்கம் விதித்துள்ள வரி சீர்திருத்தங்களுக்கு எதிராக தொழில் வல்லுநர்கள் ஒரு வார கறுப்புப் போராட்டத்தைத் தொடங்கியிருந்தனர்.