மஹரகமவில் போலி பத்திரங்களை தயாரித்து காணிகளை விற்பனை செய்து 225 இலட்சம் ரூபாவை பெற்றுக்கொண்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், சந்தேக நபர் தலா 05 ஏக்கர் காணி 03 காணிகளை விற்பனை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர் புத்தளத்தை வசிப்பிடமாகக் கொண்ட 60 வயதுடையவர் எனவும், போலி ஆவணங்களை விற்பனை செய்து பண மோசடி செய்தமை தொடர்பில் சந்தேக நபருக்கு எதிராக பல நீதிமன்றங்களில் வழக்குகள் உள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதன்படி, சந்தேக நபர் இதற்கு முன்னரும் போலி ஆவணங்களுடன் கைது செய்யப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.