இந்த பருவத்தில் 3 மில்லியன் மெட்ரிக் டன் நெல் அறுவடை எதிர்பார்க்கப்படுவதாக முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது 2.5 மில்லியன் மெற்றிக் தொன் வரை குறையும் என விவசாய அமைச்சு கணித்துள்ளது.
மேலும், நெற்செய்கை தொடர்பான சில பிரதேசங்களில் பதிவாகியுள்ள தண்டுகள் மஞ்சள் நிறமாக காணப்படுவதே நெல் விளைச்சல் குறைவதற்கான காரணம் என அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளதோடு இப்பருவத்தில் சுமார் 5 மில்லியன் மெற்றிக் தொன் நெல் அறுவடை இழப்பு ஏற்படும் எனவும் தெரிவித்துள்ளது.
இதன்படி, தண்டுகளின் மஞ்சள் நிறத்தின் நிலை குறித்து முறையான அவதானிப்புகளை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறும் தொடர்ந்தும் எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பான உண்மைகளை முன்வைக்குமாறும் விவசாய அமைச்சர் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
மேலும், இது தொடர்பான சோதனைகளில், தண்டுகள் மஞ்சள் நிறமாக மாறுவதற்கு பாஸ்பரஸ் குறைபாடு, பொட்டாசியம் குறைபாடு ஆகிய இரண்டும் ஒரே நேரத்தில், நூற்புழுக்கள் தண்டு மரங்களின் வேர் அமைப்பை சேதப்படுத்துகின்றன என்பது தெரியவந்துள்ளதோடு த்ரிப்ஸ், பழுப்புப் பூச்சி தாக்குதல், நெற்பயிர்களின் உப்புத்தன்மை, இரும்பு விஷம் போன்றவற்றால் ஏற்படும் பாதிப்புகளை அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அத்தோடு, தென் மாகாணத்தில் மாத்திரம் 8,619 ஹெக்டேயர் நெற்செய்கைகள் மஞ்சள் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக மாகாண விவசாயப் பணிப்பாளர் ஐ.டி.குணவர்தன நேற்று தெரிவித்தார்.
இதனிடையே உர மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் யூரியா உரம் தரமற்றது என அதிகாரிகள் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளதோடு, எவ்வாறாயினும், இது தொடர்பில் மீண்டும் விசாரணை நடத்துமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.