வாக்குச் சீட்டுகள் மற்றும் ஏனைய தேர்தல் பத்திரங்களை அச்சிடுவதற்கு அரசாங்க அச்சகத்திற்கு இதுவரை பணம் கிடைக்கவில்லை என சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
மேலும், காகிதங்களை அச்சிடுவதற்கும், அச்சிடுவதற்கு தேவையான ஏனைய மூலப்பொருட்களை பெற்றுக்கொள்வதற்கு பணம் தேவைப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, கடந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலின் அச்சுப் பணிகளுக்காக மாத்திரம் சுமார் 200 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதுடன் நாட்டில் தற்போது நிலவும் பணவீக்கம் காரணமாக அச்சகத்திற்கு பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளதாக அரசாங்க அச்சகத்தின் சிரேஷ்ட பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பான வாக்குச் சீட்டுகளை பெப்ரவரி 28ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பேச்சாளர் குறிப்பிட்டுள்ளதோடு தேர்தல் அச்சடிப்பதற்கு முன்பணம் பெறப்பட்டால், தேர்தலுக்குத் தேவையான வாக்குச் சீட்டுகள் மற்றும் இதர ஆவணங்களை அச்சிடுவதற்கு உரிய நாட்களில் வழங்க முடியும் என சிரேஷ்ட பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.