மின்சார அமைச்சர் காஞ்சன விஜேசேகர தமக்கு எதிராக முன்வைக்கப்படவுள்ள குற்றப்பத்திரிக்கைக்கு முகம் கொடுக்க ஆர்வமாக இருப்பதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும், சில நிமிடங்களுக்கு முன்னர் மின்சார அமைச்சர் தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கும் போதே பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவரை நீக்க சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இன்று காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளதோடு பாராளுமன்றத்தில் ஆளும் கட்சி உறுப்பினர்களின் ஆதரவையும் பெறுவேன் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.