
மொரட்டுவ பொலிஸ் நிலைய அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் குழுவொன்று நேற்று இரவு தடுத்து வைக்கப்பட்டுள்ளமைக்கு எதிராக மொரட்டுவ பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக கலவரமொன்று ஏற்பட்டுள்ளது.
மேலும், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களின் உறவினர்கள் குழுவொன்று பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக கலவரத்தில் ஈடுபட்ட்தாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இதன்படி, மொரட்டுவ, மொரவத்தை, அக்லான மற்றும் லுனாவ பிரதேசங்களைச் சேர்ந்த சுமார் 20 பேர் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகவும் எமது செய்தியாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.