இலங்கையில் வருடாந்தம் பதிவாகும் தொழுநோயாளிகளில் 10 வீதமானவர்கள் 14 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் என சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தின் பணிப்பாளர் வைத்தியர் ரஞ்சித் பதுந்துடாவா தெரிவித்துள்ளார்.
மேலும், 1995ஆம் ஆண்டு தொழுநோயை இல்லாதொழித்த நாடாக இலங்கை சான்றிதழ் பெற்றிருந்த போதிலும், இலங்கையிலிருந்து வருடாந்தம் சுமார் 2000 நோயாளர்கள் பதிவாகுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதன்படி, உலக தொழுநோய் தினம் இன்றைய வருடத்தின் தொனிப்பொருளாக இன்றே ஆரம்பிப்போம் – தொழுநோயை நிறுத்துவோம் என்ற வாசகத்துடன் ஆரம்பமானது.
மக்களை அறிவூட்டும் வகையில் பல வேலைத்திட்டங்கள் அமுல்படுத்தப்படவுள்ளதாக விசேட வைத்தியர் கலாநிதி ரஞ்சித் பதுவான்துடவ மேலும் தெரிவித்தார்.