“வானவில் வர்ண கொடிகள் எரிக்கப் படும் போது அதனை ஓரின பாலாருக்கு எதிரான போராட்டம் என்கிறார்கள் ; இஸ்ரேல் நாட்டு கொடிகள் எரிக்கப்படும் போது அதனை யூத எதிர்ப்பு போராட்டம் என்கிறார்கள் . புனித அல் குர்ஆன் பிரதிகளை எதிர்த்து இஸ்லாமிய மக்களை வெறுப்பூட்டுவதை பேச்சு சுதந்திரம் என்கிறார்கள் . அவர்கள் புனித அல் குர்ஆனின் எத்தனை பக்கங்களை வேண்டுமானாலும் எரிக்கட்டும் ! அவர்களால் அல் குர்ஆனை சுமந்துள்ள இதயங்களை எரிக்க முடியாது- ” என்று கருத்துப்பட இங்கிலாந்தில் உள்ள பிரபல தொலைக் காட்சி சேவையான இஸ்லாம் சணல் இல் பிரபல ஒளிபரப்பாளரும் ,இங்கிலாந்தின் தொழிலாளர் கட்சியை சேர்ந்த கவுன்சிலருமான மஸீஹுல்ல்லா படேல் நடாத்திய “செய்திகளும் கருத்தாடல்களும் ” நேரலை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு , அண்மையில் சுவீடன் நாட்டில் மத வெறியர்கள் கூடி துருக்கிய உயர் ஸ்தானிகர் அலுவலம் முன்பாக அல் குர் ஆனை எரித்த செய்தி தொடர்பாக,
கிழக்கு இலங்கையின் சாய்ந்தமருதுவை பூர்விகமாகக் கொண்ட இளம் வயதில் இங்கிலாந்தில் “அல் காரியா ” ( அதி சிறந்த அல் குர் ஆன் ஓதுனர் ) என்ற மகுடத்தை வென்றவரும் , தனது பன்முக ஆளுமைகளால் பல்துறை சார் விருதுகளை வென்று தனது பூர்விக மண்ணுக்கும் தனது தாய் நாட்டுக்கும் புகழ் ஈட்டி கொடுத்து வரும் பத்து வயது சிறுமி மர்யம் ஜெஸீம் ,தனது உணர்வு பூர்வமான கண்டனத்தை வெளியிட்டு நிகழ்ச்சி தொகுப்பாளரின் பாராட்டையும் பெற்றுக் கொண்டார் .
மர்யம் ஜெஸீம் இலங்கையில் முஸ்லீம்களின் ஜனாஸாக்கள் எரிக்கப்படுவதை தடுத்து நிறுத்த ஒருமித்து குரல் கொடுக்குமாறு இங்கிலாந்தின் பிரபல இஸ்லாம் மற்றும் ஐ டி என் தொலைகாட்சி சேவைகளின் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு சூட்சுமமாக தனது கருத்துக்களை வெளியிட்டு சர்வதேச கவனங்களை இலங்கை வாழ் முஸ்லீம் சமூத்தின் மீது ஈர்க்க முனைப்புடன் செயற்பட்டவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.