எதிர்வரும் மார்ச் மாதம் 9ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான வர்த்தமானியை அச்சிடுவதற்கு பல மாவட்டங்களில் இருந்து அரச அச்சகத்திற்கு அறிவிப்புக்கள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, கிடைக்கப்பெற்ற விளம்பரங்கள் எதிர்வரும் நாட்களில் வர்த்தமானியில் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், Pafferal அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி இது தொடர்பான தகவல்களை வழங்கும் போது
வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதில் ஏற்படும் தாமதம் தேர்தல் நடவடிக்கைகளுக்கு இடையூறாக இருக்காது என சுட்டிக்காட்டியுள்ளார்.