அண்டை நாடான ஸ்வீடனை கைவிட்டு பின்லாந்தை நேட்டோவில் ஏற்றுக்கொள்ள தயாராக இருப்பதாக துருக்கி ஜனாதிபதி பகிரங்கமாக அறிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எனினும், பின்லாந்தின் அண்டை நாடான ஸ்வீடனுக்கு, தனது நாட்டின் ஆதரவைப் பெற முடியாது என துருக்கி அதிபர் ரிசெப் தையிப் எர்டோகன் மீண்டும் தெரிவித்துள்ளதோடு இராஜதந்திர மோதல்களை எதிர்கொண்டு, நேட்டோ அமைப்பில் உறுப்பினர்களாக ஆவதற்கு ஸ்வீடன் மற்றும் பின்லாந்துக்கு ஆதரவை தெரிவிக்க துருக்கி மறுத்துள்ளது.
மேலும், 30 உறுப்பு நாடுகளை உள்ளடக்கிய நேட்டோவில் புதிய உறுப்பினராக இணைவதனால் தற்போதைய உறுப்பினர்கள் அனைவரும் ஒப்புக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
அத்தோடு, உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்குப் பதிலடியாக நேட்டோ உறுப்பினர் பதவிக்கு ஸ்வீடன் மற்றும் பின்லாந்து விண்ணப்பித்துள்ளபோதிலும் ஸ்வீடன் மற்றும் பின்லாந்தில் இருக்கும் குர்திஷ் போராளிகளை ஒப்படைக்குமாறு கூறி இரண்டு நாடுகளுக்கும் துருக்கி அழுத்தம் கொடுத்து வருவதக்கவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், துருக்கி நேட்டோவில் ஒரு சக்தியாக இருப்பதால், அவர்களின் ஆதரவு ஸ்வீடன் மற்றும் பின்லாந்துக்கு முக்கியமானதாக இருக்கும் என்றும் சுவீடனுடனான இராஜதந்திர நெருக்கடி அதிகரித்து வரும் பின்னணியில் துருக்கி பின்லாந்துக்கு ஆதரவை வெளிப்படுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்படி, வரும் ஜூன் மாதம் நடைபெறும் சிறப்பு மாநாட்டில் உறுப்பு நாடுகளின் எண்ணிக்கையை 32 ஆக உயர்த்த நேட்டோ நம்பிக்கை கொண்டுள்ளபோதிலும் துருக்கி, சுவீடன், பின்லாந்து ஆகிய நாடுகளுடனான விரிசல் அதற்குத் தடையாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.