
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக தானே முன்னிறுத்தப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இதற்கிடையில், 2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பாதிக்கப்படடவர்களிடம் தன மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் முன்னாள் ஜனாதிபதிதெரிவித்துள்ளார்.
மேலும், கொழும்பில் ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி, தமது ஆட்சிக்காலத்தில் இவ்வாறானதொரு அனர்த்தம் இடம்பெற்றமைக்காக தாம் மன்னிப்புக் கோருவதாகவும், தாக்குதல்கள் தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாது எனவும் தெரிவித்தார்.
அத்தோடு, “நான் தவறு செய்தேன் என்று தீர்ப்பில் கூறப்படவில்லை, ஆனால் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் செய்யும் தவறுகளுக்கு ஜனாதிபதியும் பொறுப்பு தான் எனக்கும் வழக்கிற்கும் உள்ள தொடர்பு” எனவும் முன்னாள் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.