பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் அடைக்கப்பட்டிருந்த பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தினுடைய அழைப்பாளர் வசந்த முதலிகேவினை விடுதலை செய்ய கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும்,கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் இந்த தீர்மானத்தை வழங்கினார்.
அத்தோடு, இந்த உத்தரவை அறிவித்த பிரதம நீதவான், சந்தேகநபருக்கு எதிராக பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் எந்தவொரு குற்றமும் காணப்படவில்லை எனவும் தெரிவித்தார்.
இதன்படி, இந்த உத்தரவு பிறப்பிப்பதாகவும் நீதவான் தெரிவித்தார்.