உள்ளூராட்சி ஆணையாளர்கள் மற்றும் உதவி ஆணையாளர்கள் கலந்து கொள்ளும் கூட்டம் ராஜகிரிய தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலகத்தில் தற்போது நடைபெற்று வருகின்றது.
மேலும், உள்ளூராட்சி சபைத் தேர்தல் காலப்பகுதியில் பொது வளங்களை துஷ்பிரயோகம் செய்வதை தடுப்பது மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாகவும் அரச திணைக்களங்கள் மற்றும் அரசியலமைப்பு சபைகளின் பொது வளங்களுக்குப் பொறுப்பான அதிகாரிகளும் இன்று தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு விடயங்கள் குறித்து கலந்துரையாட அழைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான பிரச்சினைகள் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று நடைபெறவுள்ளது.
அத்தோடு, அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் நேற்று வெளியிடப்பட்ட உள்ளூராட்சி வர்த்தமானி அறிவித்தல் தொடர்பான உண்மைகளை அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெளிவுபடுத்தினார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.