
முட்டை இறக்குமதி தொடர்பான மற்றுமொரு கலந்துரையாடல் எதிர்வரும் புதன்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளதாகவும் கலந்துரையாடலுக்கு கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்கள அதிகாரிகள் அழைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
மேலும், முட்டை இறக்குமதி குறித்து சமீபத்தில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன கருத்து தெரிவித்தார்.