உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்காக தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் அரசியல் கட்சிகள் அதிகளவு பணத்தைச் செலவிடுவதாக தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரம் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
மேலும், எதிர்வரும் பெப்ரவரி 10ஆம் திகதி நீதிமன்ற தீர்ப்பின் பின்னர் தேர்தல் பிரசாரம் தொடர்பில் தீர்மானிக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடன் வசதியைப் பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பிலும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரம் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் அவர்கள் தெரிவித்ததோடு நாட்டில் உயர்த்தப்பட்டுள்ள வரிப்பணத்தால் மேற்கொள்ளப்படும் பணிகள் தொடர்பில் மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்,