கட்சித் தலைவர்களின் விசேட கூட்டம் நாளை (3) பிற்பகல் 2.00 மணிக்கு நடைபெறவுள்ளதாக நாடாளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளதோடு பாராளுமன்றத்தின் எதிர்கால நடவடிக்கைகள் எவ்வாறு முன்னெடுக்கப்படும் என்பது தொடர்பிலும் கவனம் செலுத்தப்படவுள்ளது.
மேலும், அண்மையில் பதவிக்காலம் நிறைவடைந்த 9ஆவது பாராளுமன்றத்தின் நான்காவது அமர்வு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 8ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதால், நாளை நடைபெறவுள்ள கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் அது தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.