தாய்வான் மீது படையெடுப்பதற்கு தயாராகுமாறு தனது ராணுவத்திற்கு சீனா அதிபர் ஜி ஜின்பிங் உத்தரவிட்டுள்ளதாக அமெரிக்க CIA புலனாய்வு அமைப்பு எச்சரித்துள்ளது.
மேலும், CIA இயக்குனர் வில்லியம் பர்ன்ஸ் வியாழனன்று, உக்ரைனில் நடந்த சண்டையில் ரஷ்ய இராணுவத்தின் மோசமான செயல்திறன் குறித்து மேற்கு நாடுகள் அமைதியாக இருக்கும் நிலையில், தாய்வான் மீதான சீனா ஜனாதிபதியின் லட்சியங்களை குறைத்து மதிப்பிடக்கூடாது என்று தெரிவித்துள்ளார்.
அத்தோடு, 2027 ஆம் ஆண்டுக்குள் தைவான் மீது படையெடுப்பதற்கு தயார்படுத்துமாறு சீனா ஜனாதிபதி தனது இராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளதாக அமெரிக்காவிற்கு தகவல் கிடைத்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, 2027 ஆம் ஆண்டுக்குள் தைவான் மீது சீனா படையெடுக்கும் என்று இந்த உளவுத்துறை தகவல் தெரிவிக்கவில்லை என்றாலும், அது அவர்களின் லட்சியம் என்று வாஷிங்டனில் உள்ள ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட CIA இயக்குநர் தெரிவித்துள்ளார்.
மேலும், கிடைத்துள்ள புலனாய்வுத் தகவல்களின்படி, தாய்வான் தொடர்பான சீனா ஜனாதிபதியின் நம்பிக்கையை CIA அமைப்பு குறைத்து மதிப்பிடவில்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், கடந்த சில வாரங்களாக உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யா ஓரளவு வெற்றியை வெளிப்படுத்தி வருவதாகவும், அடுத்த ஆறு மாதங்கள் ரஷ்ய-உக்ரைன் போரில் முக்கியமான காலகட்டமாக இருக்கும் என்றும் CIA இயக்குனர் தெரிவித்துள்ளார்.
CIA இயக்குனர் வில்லியம் பர்ன்ஸ் மேலும் கூறுகையில், ஈரானிய அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்கள் அரசாங்கம் பெருகிய முறையில் நிலையற்றதாகி வருவதையே காட்டுகின்றதாகவும் தெரிவித்தார்.