சமஷ்டி வேலைத்திட்டத்தின் மூலம் பொதுவான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு சிரமங்களை எதிர்நோக்கும் அனைத்து நாடுகளையும் ஒன்றிணையுமாறு கேட்டுக்கொள்வதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும், ஆபிரிக்க நாடுகளின் இராஜதந்திரிகளுடன் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பிலேயே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, போட்ஸ்வானா, அல்ஜீரியா, எகிப்து, எத்தியோப்பியா, கோட் டி ஐவரி, கென்யா, காம்பியா, லிபியா, லெசோதோ, கானா, மாலி, மொசாம்பிக், மலாவி, மொராக்கோ, நைஜீரியா, ருவாண்டா, செனகல் குடியரசு, தென்னாப்பிரிக்கா, சீஷெல்ஸ், சூடான், சாம்பியா, தான்சானியா, நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் துனிசியா இராஜதந்திரிகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இதன்படி, இங்கு உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சீனா மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளின் பலம் தற்போது வளர்ந்து வருவதாகவும், இந்த நூற்றாண்டின் இறுதியில் இந்தியா மற்றும் ஆபிரிக்காவும் அவற்றைப் பின்பற்றும் என்றும், இலங்கையின் எதிர்காலத்திற்காக, இந்த நாடுகளுடன் உறவுகள் இருக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
மேலும், இலங்கையின் வெளிவிவகாரக் கொள்கையின் புதிய கட்டம் குறித்து விளக்கமளித்த ஜனாதிபதி, இலங்கையும் ஆபிரிக்காவும் ஒவ்வொரு இக்கட்டான சூழ்நிலையிலும் ஒருவருக்கொருவர் துணையாக நின்றதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, இலங்கையின் சட்ட முறைமை பல ஆபிரிக்க நாடுகளின் சட்ட முறைமை போன்றது என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இலங்கை ஆபிரிக்க பிராந்தியத்துடன் குறிப்பிடத்தக்க பொருளாதார உறவைப் பேணி வருவதாகவும், அதனை அபிவிருத்தி செய்ய வேண்டுமெனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஆபிரிக்க கண்டத்தில் இருந்து இலங்கைக்குள் சில முதலீட்டு வாய்ப்புகள் வந்தாலும் அவை மிகக் குறைவாகவே உள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
அத்தோடு, நாட்டில் அமைதியை நிலைநாட்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் முயற்சிகள் மற்றும் ஆபிரிக்க கண்டத்துடன் உறவுகளை மீள வலுப்படுத்துவதற்கான அவரது அர்ப்பணிப்பை ஆபிரிக்க இராஜதந்திரிகள் பாராட்டினர்.