இன்று நள்ளிரவு முதல் லிட்ரோ கேஸ் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய லிட்ரோ கேஸ் நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ், 12.5 கிலோ வீட்டு எரிவாயு சிலிண்டரின் விலை 334 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவித்தார்.
மேலும், 5 கிலோ ரக எரிவாயு சிலிண்டரின் விலை 135 ரூபாவினாலும் 2.3 கிலோ எரிவாயு சிலிண்டரின் விலை 61 ரூபாவினாலும் அதிகரிக்கப்படும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.