பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உறுப்பினராக டக்ளஸ் நாணயக்கார நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும், இது தொடர்பான கடிதத்தை நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன அவருக்கு அனுப்பி வைத்துள்ளதுடன் இந்த நியமனம் கடந்த இரண்டாம் திகதி முதல் அமுலுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவில் அங்கம் வகித்த மொஹான் சமரநாயக்க மற்றும் உதேனி விக்ரமசிங்க ஆகியோர் அண்மையில் பதவி விலகியதன் காரணமாக, ஆணைக்குழுவில் இரண்டு வெற்றிடங்கள் ஏற்பட்டுள்ளன.