நிலக்கரியை கொள்வனவு செய்வதற்குத் தேவையான பணத்தை வழங்க முடியாவிட்டால், நுரைச்சோலை ஆலையை தொடர்ச்சியாக இயக்க முடியாத நிலை ஏற்படும் என இலங்கை நிலக்கரி நிறுவனத்தின் தலைவர் ஷெஹான் சுமனசேகர தெரிவித்துள்ளார்.
மேலும், கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அத்துடன், இந்த வருடத்தின் முதல் வாரத்திற்குள் நிலக்கரியை இறக்குமதி செய்வதற்கு 12.32 மில்லியன் டொலர்கள் தேவைப்படுவதாக இலங்கை நிலக்கரி நிறுவனம் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சுக்கு அறிவித்துள்ளது.
மேலும், மின்சாரம் மற்றும் எரிசக்தி துறை அமைச்சருக்கு நிறுவனம் எழுதிய கடிதத்தில், ஜனவரி 30 முதல் பிப்ரவரி 3 வரை இந்த தொகை செலுத்தப்பட உள்ளதாகவும், மேலும் பல நிலக்கரி கப்பல்களுக்கு முன்பணம் மற்றும் நிலுவைத் தொகை வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இதன்படி, கடந்த ஜனவரி மாதம் இலங்கைக்கு வரவிருந்த நிலக்கரி கப்பல்களின் எண்ணிக்கை 7 ஆகும், அதில் 6 கப்பல்கள் கடந்த மாதத்தில் இலங்கையை வந்தடைந்தன.
மேலும், பிப்ரவரி மாதத்தில் மின் உற்பத்திக்கு நிலக்கரி இருப்பு போதுமானதாக இருக்கும் என நிலக்கரி நிறுவனம் தெரிவித்துள்ளது.