மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதியரசர் கே.பி.பெர்னாண்டோ, இன்று ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
மேலும், மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் புதிய தலைவராக நீதிபதி நிஷங்க பந்துல கருணாரத்ன ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அத்தோடு, மேல் நீதிமன்ற நீதிபதியாக கடமையாற்றிய எம்.ஏ.ஆர்.மரிக்கார் இன்று காலை மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக பதவிப் பிரமாணம் செய்து கொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.