ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் செயலாளர் நாயகம் பாங்கி மூன் குறுகிய விஜயமொன்றை மேற்கொண்டு இன்று இலங்கை வந்துள்ளார்.
மேலும்,முன்னாள் பொதுச் செயலாளருடன் அவரது மனைவி உள்ளிட்ட நால்வர் கொண்ட குழுவொன்று இலங்கை வந்ததாக கட்டுநாயக்க விமான நிலைய எமது செய்தியாளர் தெரிவித்தார்.
அத்தோடு, இன்று அதிகாலை 02.00 மணியளவில் சிங்கப்பூரில் இருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் இந்தக் குழுவினர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
இதன்படி, இவர்களை வரவேற்பதற்காக வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய கட்டுநாயக்க விமான நிலைய விசேட விருந்தினர் அறைக்கு வந்ததாக எமது விமான நிலைய செய்தியாளர் மேலும் குறிப்பிட்டார்.