
(எம்.என்.எம்.அப்ராஸ்)
75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் நடைமுறைப் படுத்தப்படுகின்ற “இளைஞர்களின் பங்களிப்புடன் தூய்மை மற்றும் பசுமையான இலங்கை” எனும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.ஏ.ஆசிக் அவர்களின் வழிகாட்டலில் சாய்ந்தமருது பிரதேச செயலக இளைஞர் சேவை அலுவலகர் எம். எம்.ஸமீலுல் இலாஹி அவர்களின் நெறிப்படுத்தலிலும் சாய்ந்தமருது பிரதேச இளைஞர் கழகங்களின் சம்மேளன தலைவர் ஏ.எம்.ஹிசாம் அவர்களின் ஏற்பாட்டிலும் சாய்ந்தமருது இளைஞர் கழகங்களின் சம்மேளனம் மற்றும் சாய்ந்தமருது பிரதேச செயலகமும் இணைந்து சாய்ந்தமருது கமு/கமு/ அல்- ஜலால் வித்தியாலயத்தில் இன்று (06) மரநடுகை நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டது.
இதன் போது உதவி பிரதேச செயலாளர் எம். ஐ. முவஃபிகா, நிர்வாக கிராம் உத்தியோகத்தர் எம்.எஸ்.நளீர்,பாடசாலை பிரதி அதிபர் .டீ..கே.எம்.சிராஜ், சாய்ந்தமருது பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பாடசாலை ஆசிரியர்கள், பாடசாலை இளைஞர் கழக உறுப்பினர்கள் மற்றும் பாடசாலை சுற்றாடல் கழக மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.