தென்கிழக்கு துருக்கியில் சிரிய எல்லையை அண்மித்த பகுதியில் நேற்று ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3600ஐ தாண்டியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், துருக்கியில் 2316 இறப்புகளும், சிரியாவில் 1293 இறப்புகளும் பதிவாகியுள்ளதாகவும் துருக்கியில் பதிவாகியுள்ள காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 12,000ஐ தாண்டியுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, நிலநடுக்கத்தினால் இடிந்து விழுந்த கட்டிடங்களின் இடிபாடுகளில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும், துருக்கியின் இஸ்தான்புல் விமான நிலையத்தில் பெருமளவிலான மக்கள் திரண்டு வருவதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. துருக்கியில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளில் ஈடுபடுவதற்காக விமானம் மூலம் அந்த பகுதிகளுக்குச் செல்ல எதிர்பார்க்கப்படும் குழுவினர் விமான நிலையத்தில் குவிந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.