ஆறு நிலக்கரி கப்பல்களுக்கு 30 வீத முன்பணம் செலுத்தப்பட்டுள்ள போதிலும் எதிர்காலத்தில் இறக்குமதி செய்யப்படவுள்ள கப்பல்களுக்கான முன்பணம் செலுத்தப்படாவிட்டால் மின்சார உற்பத்தி பாதிக்கப்படலாம் என இலங்கை நிலக்கரி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், எதிர்காலத்தில் மேலும் 16 நிலக்கரி கப்பல்கள் கொண்டுவரப்பட வேண்டும் என இலங்கை நிலக்கரி நிறுவனத்தின் தலைவர் தலைவர் ஷெஹான் சுமனசேகர தெரிவித்துள்ளார்.
அத்தோடு, இன்னும் சில தினங்களில் வரவிருக்கும் மூன்று கப்பல்களும் வந்து சேர்ந்த பிறகு அடுத்த மாதம் வரை நாட்டுக்கு தேவையான நிலக்கரி இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், மின் உற்பத்திக்கான நிலக்கரியை மின் உற்பத்தி நிலையங்களுக்கு கொள்வனவு செய்வதற்கு பணம் வழங்குமாறு இலங்கை நிலக்கரி நிறுவனத்தின் தலைவர் அண்மையில் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகரவிடம் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்திருந்தார்.