முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்ட தவறான அறிவுறுத்தல்களின் காரணமாகவே அவரால் வரிகள் குறைக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
மேலும், அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதேவேளை, இந்த வருட வரவு செலவு திட்டத்தில் முன்மொழியப்பட்ட தனியார் துறை ஊழியர்களுக்கு அக்ரஹார சுகாதார காப்புறுதிக்கு நிகரான சுகாதார காப்புறுதியை வழங்குவதற்கான முன்மொழிவை நடைமுறைப்படுத்தும் வகையில் ஊழியர் நம்பிக்கை நிதிய சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
மேலும், முறையான மீளாய்வு மூலம் பொதுச் செலவினங்களை காரணங்களுடன் தெளிவுபடுத்தும் நோக்கத்துடன் பூஜ்ஜிய அடிப்படையிலான வரவு செலவுத் திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கான முன்மொழிவுக்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.