
துருக்கியின் நூர்தாகி பகுதியில் இன்று 4.3 ரிச்டர் அளவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
துருக்கியின் தென்கிழக்கு பகுதியாகிய சிரியாவினுடைய எல்லையையொட்டி அமைந்திருக்கும் காசியான்டெப் நகரத்தில் அருகே நேற்று முன்தினம் அதிகாலையில் 17.9 அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கமொன்று ஏற்பட்டது.
மேலும், இந்த நிலநடுக்கத்தால் துருக்கியின் சிரியாவில் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்து தரைமட்டமாகிப்போகியதோடு . அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கங்கள் ஏற்பட்டிருந்தது . இதனால் ஒரே நாளில் பலி எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டியது.
அத்தோடு, இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியியானது இரவு பகல் என்று பாராமல் மீட்பு குழுவினருடைய அயராத முயற்சியினால் மேற்கொண்டு வருகின்றனர்.
தொடர்ந்து, நேற்று 5.5 மற்றும் 5.7 என ரிச்டர் அளவுகளில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டிருந்த நிலையில், இன்று மீண்டும் நிலநடுக்கமானது துருக்கியின் நூர்தாகி பகுதியில் 4.3 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டிருப்பதனால் மக்கள் பயத்தில் உறைந்துள்ளனர்.
மேலும், இதுவரை பலி எண்ணிக்கை 8 ஆயிரத்தை தாண்டியுள்ளது.