
இராஜாங்க அமைச்சர் டயானா கமகே குடிவரவு குடியகல்வு சட்டத்தின் கீழ் குற்றமிழைத்திருந்தால் அவரை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்த பிடியாணை தேவையில்லை என கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் திறந்த நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.
மேலும், டயானா கமகேவின் பிறப்புச் சான்றிதழ், தேசிய அடையாள அட்டை மற்றும் கடவுச்சீட்டுகள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடு கோரப்பட்ட போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது, குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் விசாரணைகளின் முன்னேற்றத்தைக் காட்டும் அறிக்கையொன்றை நீதிமன்றில் சமர்ப்பித்துள்ளனர்.