உரிய மனுக்கள் பரிசீலிக்கப்படும் வரை நீதிபதிகளின் சம்பளத்தில் இருந்து வரி செலுத்துவதைத் தடுக்கும் தடை உத்தரவை நீட்டித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும், சோபித ராஜகருணா, தம்மிக்க கணேபொல மற்றும் நீல் இத்தவெல ஆகிய மூவரடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு முன்னிலையில் இந்த மனுக்கள் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
இதன்படி, மனுதாரர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா, இந்த மனுக்களை முழு மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு முன்பாக பரிசீலிக்குமாறு கோரி மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
அத்தோடு, குறித்த பிரேரணை மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவரின் பரிசீலனைக்காக அனுப்பி வைக்கப்படும் என மூவரடங்கிய நீதிபதிகள் குழுவின் தலைவர் சோபித ராஜகருணா தெரிவித்தார்.
இதனடிப்படையில், குறித்த பிரேரணையை தலைமை நீதிபதி முன்னிலையில் பரிசீலிப்பதற்காக மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் எதிர்வரும் 21ஆம் திகதி கூட்டப்படும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அத்தோடு, மனுதாரர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா நீதிமன்றத்தில் ஆஜராகி, தனது வாடிக்கையாளர்களின் சம்பளத்தில் இருந்து உரிய வரியை அறவிடுவதை தடுக்கும் தடை உத்தரவை நீடிக்குமாறு கோரினார்.
இதன்படைய, சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் .நிர்மலன் விக்னேஸ்வரன் அந்தக் கோரிக்கையை எதிர்த்தார்.
எவ்வாறாயினும், முன்வைக்கப்பட்ட உண்மைகளை பரிசீலித்த மேன்முறையீட்டு நீதிமன்ற பெஞ்ச், மனு பரிசீலிக்கப்படும் வரை அதற்கான தடை உத்தரவை நீட்டித்து உத்தரவிட்டது.
மேலும், இலங்கை நீதித்துறை அதிகாரிகள் சங்கம் மற்றும் இலங்கை உயர் நீதிமன்ற நீதிபதிகள் சங்கம் என்பன தமது சம்பளத்தில் இருந்து வருமானம் ஈட்டும்போது வரியை பிடித்தம் செய்வது சட்டத்திற்கு முரணானது எனவும் அதனால் அந்த முடிவை செல்லுபடியற்றதாக்குமாறும் கோரி 2 மனுக்களை சமர்ப்பித்துள்ளனர்.