அலாஸ்காவில் இருந்து 40,000 அடி உயரத்தில் வானில் மிதந்து கொண்டிருந்த அடையாளம் தெரியாத பொருளை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியுள்ளது.
மேலும், அடையாளம் தெரியாத அந்த பொருளை அமெரிக்க போர் விமானம் சுட்டு வீழ்த்தியதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
இதன்படி, சீனா பலூன் ஒன்று அமெரிக்கா போர் விமானத்தால் சுட்டு வீழ்த்தப்பட்ட 06 நாட்களுக்கு பின்னர் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது குறிப்பிட தஜாக்க விடையமாகும்.
மேலும், மிதக்கும் பொருள் என்ன அல்லது அதன் நோக்கம் என்ன என்பது தெரியவில்லை என்றும் ஆனால் அது சிவில் விமான நடவடிக்கைகளுக்கு அச்சுறுத்தலாக இருக்கலாம் என்பதால் சுட்டு வீழ்த்தப்பட்டது எனவும் வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி தெரிவித்துள்ளார்.
இதன்படி, இந்த பறக்கும் பொருளின் உரிமை யாருடையது என்பது இதுவரை கண்டறியப்படவில்லை என்றும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், ஜனாதிபதி ஜோ பைடன் இராணுவத்திற்கு வழங்கிய உத்தரவின்படி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த அடையாளம் தெரியாத பொருள் சீனா பலூனுடன் ஒப்பிடும் போது சிறியது என கூறப்படுவதோடு இது ஒரு சிறிய காரின் அளவு என்றும் வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் மேலும் தெரிவித்தர்.