நல்லிணக்கம், அபிவிருத்தி, கலாசாரம் என்பன அரசாங்கத்தின் கொள்கையாகும் எனவும், வீழ்ந்த நாட்டைக் கட்டியெழுப்ப அனைத்து மக்களும் புதிய நம்பிக்கையுடன் சகோதரத்துவத்துடன் கைகோர்க்க வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும், நல்லிணக்கமான சிங்கள, தமிழ்த் தலைவர் மூலம் நாட்டை வேகமாக முன்னோக்கி கொண்டு செல்ல முடியும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
அத்தோடு, இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் 1350 கோடி ரூபா செலவில் யாழ்ப்பாணத்தில் நிர்மாணிக்கப்பட்ட “கலாச்சார மண்டபம்” திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
இதன்படி, 75வது சுதந்திர தின விழாவை கொழும்பில் மாத்திரமன்றி யாழ்ப்பாணத்திலும் கொண்டாட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
இதேவேளை, யாழ்ப்பாணத்தில் வடமாகாண அரசியல் பிரதிநிதிகள் மற்றும் அறிஞர்கள் குழுவுடன் ஜனாதிபதி கலந்துரையாடலை மேற்கொண்டார்.
மேலும், ஐக்கியத்தின் ஊடாக மாத்திரம் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அங்கு சுட்டிக்காட்டினார்.
அத்தோடு, நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் வேகம் மக்களின் மனப்பான்மை மற்றும் அர்ப்பணிப்பைப் பொறுத்தே அமையும் என ஜனாதிபதி தெரிவித்தார்.