எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தி அனுராதபுரம் மாநகர சபைக்கு போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த அனுராதபுரம் நகரிலுள்ள பிரதான பாடசாலையொன்றின் அதிபர் ஒருவருக்கு பணிபுரிய தடை விதிக்கப்பட்டுள்ள வடமத்திய மாகாண கல்வி திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை சமர்ப்பித்தமைக்காக குறித்த அதிபர் தனது பதவியை இராஜினாமா செய்யாமல் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் மேலும் தெரிவித்தார்.
அத்தோடு, தேர்தல் சட்டத்தின்படி, அரசப் பணியில் உள்ள பணியாளர் தரநிலை அதிகாரி ஒருவர் தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிட்டால், அவர் வேட்புமனுவைச் சமர்ப்பிப்பதற்கு முன் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் எனவும் அந்தவகையில் குறித்த அதிபர் தனது பதவியை இராஜினாமா செய்துவிட்டு புதிய வேட்புமனுக்களை சமர்ப்பித்துள்ளதாக கடந்த 8ஆம் திகதி அனுராதபுரம் மாவட்ட தேர்தல் காரியாலயத்தில் முறைப்பாடு கிடைத்துள்ளது.
மேலும், இது தொடர்பான முறைப்பாட்டினை ஆராய்ந்த வடமத்திய மாகாண கல்வி திணைக்களம், குறித்த அதிபரின் சேவையை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.