
எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு இடையூறு விளைவித்ததாக இதுவரை 20 வழக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மேலும், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா, சில இடையூறுகளை அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் செய்ததாகவும், மற்றைய இடையூறுகளை கட்சிகளின் பிரதிநிதிகளின் வழிகாட்டுதலின் பேரில் வேறு குழுக்கள் செய்ததாகவும் தெரியவந்துள்ளார்.
அத்தோடு, தேர்தல்கள் ஆணைக்குழுவின் பிரதிநிதிகள், மாவட்ட மற்றும் உதவி தேர்தல் ஆணையாளர்களுக்கு இடையில் நேற்று இடம்பெற்ற சந்திப்பில் இந்த விடயங்கள் தெரியவந்ததாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளதோடு இது தொடர்பான சம்பவங்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் மேலும் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.