
ஃபேஸ்புக் மூலம் ஏற்பாடு செய்திருந்த விருந்தொன்றை சுற்றிவளைத்த பியகம காவல்துறை அதிகாரிகள் 31 சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.
மேலும், கஞ்சா, ஐஸ் மற்றும் போதைப்பொருட்களை வைத்திருந்த சந்தேக நபர்கள் குழுவொன்றை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அத்தோடு, கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 20 முதல் 27 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும், அவர்கள் மட்டக்குளி, மோதர, வெல்லம்பிட்டிய, மருதானை, கிராண்ட்பாஸ், பேலியகொட மற்றும் களனி ஆகிய பகுதிகளை வசிப்பிடமாக கொண்டவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர்கள் இன்று மஹர நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.