மின் கட்டண திருத்தம் தொடர்பாக அமைச்சர்கள் குழு எடுத்த முடிவை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரிக்க அனுமதி உள்ளதா? இல்லை? இது தொடர்பான தீர்மானம் எதிர்வரும் 17ஆம் திகதி அறிவிக்கப்படும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது.
மேலும், சோபித ராஜகருணா மற்றும் தம்மிக்க கணேபொல ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்தோடு, மின் நுகர்வோர் சங்கம் மற்றும் சுற்றுச்சூழல் நீதி மையம் சார்பில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் மின்சார சபை உள்ளிட்ட பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல், மின் கட்டண திருத்தம் தொடர்பான அமைச்சரவை முன்மொழிவுகளை நீதிமன்றில் முன்வைத்ததாக எமது நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.
மேலும், மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட தகவல்களை பரிசீலித்ததோடு சம்பந்தப்பட்ட மனுவை விசாரிக்க அனுமதிக்குமா? இல்லையா? என்பது தொடர்பான முடிவினை எதிர்வரும் 17 ஆம் திகதி அறிவிக்கப்படும் என உத்தரவிடப்பட்டுள்ளது.