சீனா, இந்தியா, சவுதி அரேபியா மற்றும் G7 நாடுகளின் அதிகாரிகள் அடுத்த வெள்ளிக்கிழமை புதிய இறையாண்மைக் கடன் வட்டமேசையில் சேருவார்கள் என்று ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.
மேலும், காணொளி தொழில்நுட்பத்தின் ஊடாக கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்திச் சேவை தெரிவித்துள்ளது.
இதன்படி, எத்தியோப்பியா, ஜாம்பியா, கானா, இலங்கை, சுரினாம் மற்றும் ஈக்வடார் போன்ற நாடுகளின் அதிகாரிகளும் ஏற்கனவே நிதி நெருக்கடியை எதிர்கொண்டு கடன் வசதிகளை நாடுகின்றனர் என்று பெயரிடப்படாத ஆதாரங்களை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
அத்தோடு, சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி மற்றும் G20 குழுவின் தற்போதைய தலைமைப் பொறுப்பை வகிக்கும் இந்தியா, அதன் இணைத் தலைவராக இருக்கும் என்று ராய்ட்டர்ஸ் செய்தி சேவை மேலும் தெரிவித்துள்ளது.
மேலும், ஜி20 குழுவை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடுகளின் நிதித்துறைக்கு பொறுப்பான அதிகாரிகளின் கூட்டம் வரும் 23ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரை இந்தியாவின் பெங்களூருவில் நடைபெறவுள்ள சூழலில் இந்த சந்திப்பு நடைபெறுகின்றது.