
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட மின்சார சபையின் கட்டண திருத்தத்தை அமுல்படுத்துவதன் மூலம் மின்சார பாவனையாளர்களுக்கு தடையில்லா மின்சாரத்தை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
அத்துடன், குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குமாறும், மத ஸ்தலங்கள் மற்றும் அரச கல்வி நிலையங்களுக்கு சூரிய மின் தகடுகளை வழங்குமாறும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் மற்றும் அது தொடர்பான அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.