முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அவரது மனைவி அயோமா ராஜபக்ஷ இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து சீனா செல்வதற்கான எதிர்பார்ப்புடன் மலேசியாவின் கோலாலம்பூருக்கு சென்றுள்ளதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், முன்னாள் ஜனாதிபதியும் அவரது மனைவியும் இன்று அதிகாலை 12.25 மணியளவில் மலேசியாவின் கோலாலம்பூருக்கு மலேசியன் ஏர்லைன்ஸ் விமானமான MH-178 இல் புறப்பட்டுள்ளனர்.
ஆனால் அவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை விட்டு வெளியேற விமான நிலைய விமான சரக்கு முனையத்தை பயன்படுத்தியுள்ளதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.