மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ராலுக்கு எதிராக விதிக்கப்பட்ட பயணத்தடையை நீடிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், முன்னாள் மத்திய வங்கி ஆளுநருக்கு எதிராக தென் மாகாண முன்னாள் ஆளுநர் ராஜித கீர்த்தி தென்னகோனினால் தாக்கல் செய்யப்பட்ட தனிப்பட்ட முறைப்பாடு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுனாவல இந்த வெளிநாட்டு பயணத்தடையை நீடித்துள்ளார்.
அத்தோடும் அஜித் நிவார்ட் கப்ராலின் சட்டத்தரணிகள் முன்வைத்த பூர்வாங்க ஆட்சேபனைகள் மீதான உத்தரவை ஏப்ரல் 6ஆம் திகதி அறிவிக்கவுள்ளதாகவும், இந்த தனிப்பட்ட முறைப்பாட்டை பராமரிக்க முடியாது எனவும் நீதவான் அறிவித்துள்ளார்.
மேலும், அதுவரை வெளிநாட்டு பயணத்தடை நீடிக்கப்படும் என்றும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2006 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக கடமையாற்றிய போது, பொதுப் பணத்தை துஷ்பிரயோகம் செய்ததாக ரஜித் கீர்த்தி தென்னகோனினால் இந்த முறைப்பாடு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.