மின்சாரம், பெட்ரோலியம் மற்றும் மருத்துவமனைகளை அத்தியாவசிய சேவையாக்கும் வர்த்தமானி அறிவிப்பு மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உத்தரவின் பேரில் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன்படி, மின்சாரம், பெட்ரோலிய பொருட்கள் மற்றும் எரிபொருள் விநியோகம் தொடர்பான அனைத்து சேவைகளும் அத்தியாவசிய சேவைகளாக இருக்கும் வர்த்தமானியியல் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், மருத்துவமனைகள், முதியோர் இல்லங்கள், மருந்தகங்கள் மற்றும் பிற ஒத்த நிறுவனங்களில் நோயாளிகளின் பராமரிப்பு மற்றும் வரவேற்பு, பராமரிப்பு, உணவளித்தல் மற்றும் சிகிச்சை தொடர்பாக தேவைப்படும் அல்லது செய்ய வேண்டிய அனைத்து சேவைப் பணிகளும் அத்தியாவசிய சேவைகளாகும் என் குறித்த வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.