உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதைத் தடுக்கும் அரசாங்கத்தின் முயற்சிகளை முறியடிக்கும் வகையில், தேசிய மக்கள் சக்தி கட்சி இன்று நாட்டின் பல முக்கிய நகரங்களில் போராட்டத்தினை நடத்தியுள்ளது.
இதன்படி,தங்காலை, களுத்துறை, மஹரகம மற்றும் கம்பஹா ஆகிய நகரங்களில் இந்தப் போராட்டம் நடத்தப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
மேலும், எதிர்வரும் மார்ச் மாதம் 09ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தலை தடுக்க அரசாங்கம் கோழைத்தனமான முயற்சியை மேற்கொள்வதாகவும், மக்களின் ஜனநாயக உரிமைகளை பாதுகாக்கும் வகையில் தேர்தலை நடத்த வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்தனர்.