விற்பனைக்கு தயார் செய்யப்பட்ட 42 போலி தங்கத்துடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய நேற்று (17) பிற்பகல் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்படி, 11 கிலோ 100 கிராம் எடையுள்ள தங்கத் துண்டுகள் கண்டெடுக்கப்பட்டதுடன், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட டிஜிட்டல் தராசு உள்ளிட்ட சில உபகரணங்களும் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் கனகபுரம் மற்றும் கிளிநொச்சி பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.